Friday, October 18, 2013

மீண்டும் ஒருவரின் உறவினர் கண்டுபிடிக்கப்பட்டார் ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services" 
****** 
[For English version, please scroll down] 
(220/17/10/13)

அரசு மருத்துவமனை வளாகத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில் அனைவரிடமும் தகராறு செய்து கொண்டிருந்த சரவணன் என்பவரை பொதுமக்கள் அடித்திருகின்றனர் . பின்னர் அவர்கள் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. அவரிடம் விசாரித்த பொது அவர் திண்டுக்கல், தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. உடனே அவரது குடும்பத்தினருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு தகவல் தெரிவித்தது. அவரை அழைத்து செல்ல அவரது மனைவி உட்பட உறவினர்களும் உடனடியாக வந்து விட்டனர். அவரை கண்டதும் அவரது மனைவியும் அவரது உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்பவர்கள் நெஞ்சை உருக்கியது. அவரது இந்த நிலை எப்படி நேர்ந்தது என்பது குறித்து அவர்களிடம் விசாரிக்கையில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும் குடிப்பழக்கத்தாலேயே இப்படி அவர் நடந்து கொண்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். குடிப்பழக்கம் இருக்கிறது என்றாலும் இவர் இவ்வளவு மோசமாகா நடந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் வருத்தமுடன் கூறினார். என்றாலும் என்ன ஆனதோ என்று மனம் கவலை கொண்ட நிலையில் அவரை பாதுகாப்புடன் மீது நல்ல முறையில் பாதுகாப்பும் மருத்துவ உதவியும், பராமரிப்பும் வழங்கி மீண்டும் அவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க உதவிய ஈரநெஞ்சம் அமைப்புக்கு அவரது மனைவியும் உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கொண்டனர். மீண்டும் உறவுகளை தொலைத்து பரிதவித்த சரவணனையும், அவரை காணமல் தவித்த குடும்பத்தினரையும் ஒன்று சேர்த்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மகிழ்ச்சி அடைகிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


A man aged about 38 years was disturbing the public at Kovai Govt Hospital today (17/10/13) He was hurt by public and he had fracture on his right leg. No one knows whether he is mentally ill person or drunker. Eeraneanjam was informed about this, and immediately eeraneanjam visited that place and admitted him in GH. From enquiry Eeraneajam came to know that he is Mr. Saravanan from Thadikoambu, Thindukal region, and his wife was informed about him. Mrs. Selvi, wife of Saravanan and his relations were came to coimbatore yesterday night itself and they were crying when they saw him. Mrs. Selvi told that he is not mentally ill person and only drunken. So only he was behaving like that and they wouldn't expect that he will behave like this. They are very thankful to eeranenjam for its timely help and taken care of Mr. Saravanan. Eeranenjam also feels very happy to join them together.

~Thanks
Eeraneanjam






மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

கவியாழி said...

தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் மகேந்திரன்

Post a Comment