Saturday, 19 May 2012

வேலைக்கு செல்ல இருந்த குழந்தைகளை மீட்ப்பு


இந்த புகைப்படத்தில் காணப்படும் இரண்டு குழந்தைகளுக்கு , ரஞ்சித் (13 வயது, எட்டாம் வகுப்பு செல்லகூடியவர்) மற்றும் பவித்திரா (11 வயது, ஆறாம் வகுப்பு செல்லக்கூடியவர்), அப்பா கிடையாது மற்றும் துரதிஸ்டவசமாக, அவர்களின் அம்மாவிற்கு, உயிர் கொல்லி நோய் தொற்றியுள்ளது. அவர்களின் அம்மாவிற்கு, கடந்த ஆறு மாதமாக, உடல்நிலை மிகவும் மோசமடைந்தததால், அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இவர்கள், மதுரை ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து வந்தவர்கள். இவர்களை, இந்த குழந்தைகளின் மாமா, கோவைக்கு, எதோ ஒரு காப்பகத்தில் சேர்க்கலாம் என்று முடிவு செய்து, கூட்டிக்கொண்டு வந்தார். அந்த நல்ல சமயத்தில், " ஈர நெஞ்சம்" அறக்கட்டளையின்சார்பாக திரு. மகேந்திரன், எதேட்சையாக, கோவை "கருணை இல்லத்தில் (18 .05 .2012), உணவு வழங்கும்போது . இந்த குழந்தைகளின் அம்மா, மற்றொரு காப்பகத்தில் அனுமதிக்கப்பட உள்ளார் இந்த குழந்தைகளை வேலைக்கு அனுப்பபோகிறார்கள் , என்பதையும் அறிந்து கொண்டேன் . இந்த சூழ்நிலையில்,  இந்த குழந்தைகளை அழைத்து வந்தவரிடம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி எடுத்து கூறி   எங்களது "ஈர நெஞ்சம்" அறக்கட்டளையின் அறங்காவலர்கள், ஒரு மனதாக முடிவெடுத்து, அவர்களுடைய சாப்பாட்டு மற்றும் கல்வி செலவுகளை முழுவதுமாக எடுத்துக்கொள்வதாக உறுதிபூண்டு, அந்த குழந்தைகளை Universal peace foundation, கோவையில் தங்க ஏற்பாடு செய்துள்ளோம். குழந்தையை அழைத்து வந்த அந்த குழந்தைகளின் தாய் மாமா அவர்களுக்கு கோவையில் இப்படிப்பட்ட நல்ல  மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்று கூறி நெகிழ்த்து போனார் . 


~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Friday, 18 May 2012

நீ வரும் அழகை பார்த்து...

உனக்குத்தான்
வெட்கப்பட  தெரியும்
என
நினைக்காதே..!
கனவில்
நீ வரும் அழகை
பார்த்து
பலமுறை
கூச்சப்பட்டு
நானும் கண்விழித்து
இருக்கிறேன்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Wednesday, 16 May 2012

உணர்ந்தால் போதும்...

என் கவிதைகளை
எல்லாம்
நீ
படிக்கும் போது
நான்
இங்கு இருப்பேனா.?
எனத் தெரியாது..!
ஆனால்
இதை படிக்கும் போது
இதெல்லாம்
உனக்காகத் தான் எழுதினேன்
என
நீ
உணர்ந்தால் போதும்...


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

நாகம்மாள் பாட்டிக்கு 24 மணிநேரத்திற்குள் உறவு கிடைத்தது ~மகேந்திரன்


(15 .05.2012) காலை, சுமார் 11 மணிக்கு, கோவை, ராமநாதபுரத்தில் ஒரு பாட்டி, தன் நிலையை மறந்து, சுற்றிகொண்டிருப்பதாக கேள்விப்பட்டதும், ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரான திரு. Magi Mahendiran,(நான்) எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. நான் அங்கு சென்று, அந்த பாட்டியை பார்க்கையில், அவரிடம் ஆர். எஸ். புரம் சீத்தாலட்சுமி மருத்துவமனையின், மருத்துவரின் குறிப்பு சீட்டு ஒன்று இருந்தது. பாட்டியிடம் நான்விசாரிக்கும் போது எதுவும் நினைவுக்கு வரவில்லை என்பதை மட்டும் கூறினார் அதனால்

அந்த பாட்டிக்கு ஒரு பாதுகாப்பான தேவைப்பட்டதால், கோவை ,அல்வெனியா காப்பகத்தை அணுகியதில், அவர்கள், அந்த பாட்டிக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர். இதனிடையில், அந்த மருத்துவரின் குறிப்பை, வைத்துக்கொண்டு, அந்த மருத்துவமனைக்கு சென்று விவரம் சேகரித்ததில், அவரது வயது 67 என்றும், பெயர் நாகம்மாள் என்றும் தெரியவந்தது.

மருத்துவமனை கொடுத்த, விவரங்களின் படி, அந்த பாட்டியின் வசிப்பிடம், சரவணம்பட்டி என்று தெரிந்தவுடன், கொடுத்துள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டதில், அந்த பாட்டியின் மருமகன் திரு. ஜெயராம் என்றும் அவர்கள், அந்த பாட்டியை, காலையில் இருந்து தேடிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது. இப்போது, இரவு நேரம் ஆகையால், நாளை காலை, அந்த பாட்டியை அழைத்து செல்ல அந்த பாட்டியின் உறவினர்கள் வருவதாக தெரிவித்துள்ளனர்.

இன்று (16 .05.2012) காலை,அந்த பாட்டியின் மருமகன் திரு. ஜெயராம், மற்றும் நாகம்மாள் பாட்டியின் தங்கையின் மகன் அழகப்பன்  அவர்கள் நேரில் வந்து பாட்டியை சந்திக்கும் போது பாட்டிக்கு அவர்களை சற்று நேரம் கழித்துதான் நினைவு வந்தது மகன் அழகப்பனை கட்டித்தழுவி அழும்போது எங்களது
கண்ணும் கலங்கியது சற்று நேரத்தில் அவர்கள் பாட்டியை தன் வீட்டிற்கு, அழைத்து செல்ல ஏற்பாடு நடந்தது . மேலும் அந்த பாட்டியை அழைத்து செல்லும் போது ஜெயராம், மற்றும் அழகப்பன் கூறும்போது நாகம்மாள் பாட்டிக்கு மனநிலை சரி இல்லை என்பதும் , இனி நாங்கள் கவனமாக பார்த்து பராமரிதுக்கொல்கிறோம் என்பதையும் உறுதியளித்தார்கள் ,மேலும் அவர்கள் காப்பக நிர்வாகிக்கும் ,பாட்டியை பற்றி தகவல்தந்த எனக்கும் நன்றிய தெரிவித்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.  பாட்டி காப்பகத்தை விட்டு செல்லும் போது அவர்களது கண்ணில் பெரும் நிம்மதி தெரிந்தது .
கொஞ்சம் கஷ்ட்டம் தாங்க ஆனா பாதிக்கப்பட்டவங்களின் சந்தோஷ படராங்கான எவ்ளோவேனாலும் கஷ்ட்டப்படலாம்ங்க...
~மகேந்திரன்
ஈரநெஞ்சம்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Monday, 7 May 2012

கோவை வானொலி நான் உரையாற்றிய பதிவு ~மகேந்திரன்

கோவை வானொலி நிலையம் 24/01/12 அன்று  இளையபாரதம் நிகழ்ச்சியில் நான் உரையாற்றிய பதிவு... 
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கருப்புகொடி காட்டுகிறதோ..♥

முன் அறிவிப்பு இல்லாமலே
என்
மீது யுத்தம் செய்யும்
உன்
விழிகளுக்கு
உன்
இமைகளே
கருப்புகொடி காட்டுகிறதோ..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Friday, 4 May 2012

நன்றி தினத்தந்தி

 தமிழ் நாளிதழான தினத்தந்தி என்னை , என் சேவைகளின் சிலவற்றையும் 26 /04 /12 வெளியிட்டது ....
நன்றி தினத்தந்தி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Thursday, 26 April 2012

சில அடி தள்ளி இருந்தும்

பல மைல்களுக்கு அப்பால்

இருந்தாலும் தன் துணையை

அடையாளம் கண்டுக்கொள்ளும்

பெண் பட்டாம் பூச்சி...

சில

அடி தள்ளி இருந்தும்

ஏனடி என்னை கண்டும் காணமல்

...நீ ?



மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Thursday, 19 April 2012

வெறும் சாதாரணமாக...

நீ
உயிரைவிட
உயர்ந்தவள்....
ஆனாலும்
வெறும் சாதாரணமாக
உன்னை
உயிரே என்றுதான்
அழைக்க முடிகிறது..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Wednesday, 18 April 2012

facebook நண்பர்கள் அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்து ஆதரவற்றவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்


18/04/12 அன்று  முகநூல்  அன்னக்கொடை ,புன்னகை தோட்டம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து , கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் இருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை,மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் படி அங்குள்ளவர்களுக்கு  18/04/12 காலை அரவிந்த் மருத்துவமனை மருத்துவர் dr. வித்யா தேவி தலைமையில் 11 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு நேரில் வந்து அங்கு இருக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தினர் பலருக்கு கண் கண்ணாடி பொருத்தப்பட்டு  , அறுவை சிகிச்சைக்கு   தகுதியான கண்களில் குறையுள்ளவர்களை 7 பேரை தேர்வு செய்து மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டு .  அவர்களுக்கு  அறுவை சிகிச்சை 20/04/2012 அன்று அவர்களை நல்லபடியாக அன்னை தெரேசா காப்பகத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் .
இந்த முகாமிற்கு முகநூல் அன்னக்கொடை ,புன்னகை தோட்டம் நண்பர்கள் ஏற்பாடு செய்ய நண்பர்கள் ஆடி தபசு, Yamidhasha Nisha , Madhu Alex. மற்றும் magi mahendran  கலந்துகொண்டு முகாம் சிறப்பாக நடக்க உதவினர்.
மேலும் இந்த முகாமிற்கு ஆதரவளித்த முகநூல் அன்னக்கொடை, புன்னகை தோட்டம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நாம  எல்லோரும்  இருக்கும்  வரை யாரும் அநாதை என்பது இல்லைங்க .... 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Tuesday, 17 April 2012

மனநிலை பாதித்த கோவிந்தராஜு குடும்பத்துடன் இணைந்தார்

கடந்த 18 / 12 / 11 அன்று  ஆம்பூர் (வேலூர்) ரயில்நிலையம் எதிரே  இவரை அரைகுறை ஆடையுடன்மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிதிரிந்ததை  நேரில் கண்டு அவரை ஏதாவது ஒரு காப்பகத்தில் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என  நானும் (மகேந்திரன்) நண்பர் சுதர்சனனும் முடிவு செய்தோம்  . திருபதூர் பகுதியில் உள்ள "உதவும்  உள்ளங்கள்" என்னும் மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லைத்தை தொடர்புகொண்டு இவரை பற்றி தகவல் கொடுத்து அந்த இல்லைத்தை சேர்ந்தவர்கள் நேரில் அவரை அணுகி  பரிவுடன் அழைத்து சென்று அவர்களுடைய இல்லைதில் பராமரித்து வந்தார்கள் ,

அங்கு அவருக்கு மருத்துவ உதவி கொடுக்கப்பட்டு வந்தது அதனை தொடர்ந்து  கடந்த சில நாட்களாக அவரிடம் பெரும் மாற்றம் காணப்பட்டது அவர் பேச துவங்கினார் , அவருடைய பெயர் கோவிந்த ராஜு என்றும்  பெற்றோர் சீனி கவுண்டர், கோவிந்த அம்மாள் என்றும்  முகவரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் என்றும் கூறினார் , அதனை கொண்டு காப்பகத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜுவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைத்து கோவிந்தராஜு அவர்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள்.



மகிழ்ச்சியான விஷயம்ங்க இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்ன என்றால் கோவிந்தராஜு அவர்களது பெற்றோரை  பிரிந்து ஆறு வருடங்கள் ஆகியுள்ளது.

கோவிந்தராஜ் அவரகளது உறவினருடன் சேர்க்க உதவிய  "உதவும்  உள்ளங்கள்" என்னும் மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தை எப்படி பாராட்டுவது வார்த்தைகளே இல்லை சாலையோரமாக கோவிந்தராஜுவை கண்டு எனக்கு தகவல் கொடுத்த  சுதர்சனனுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்...
~மகேந்திரன்

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Saturday, 14 April 2012

திருநங்கை சண்முக ப்ரியா...

அரவாணிகள் என்றால் காமத்திற்கும் காசுக்கும் மட்டுமே உலாவும் ஒரு பிறப்பு என எல்லோர் மனதிலும் படிந்து விட்டது...
அவர்களைக்கண்டால் ஏளனமாய் பார்ப்பதும் கிண்டல் செய்வதும் என கேலிக்கூத்தாக்கி விட்டது சமுதாயம்.
ஆனால் கோவை சௌரிபாளையம் பகுதிக்கு திருநங்கை சண்முக ப்ரியா, 35 வயது,திருநங்கை சண்முக ப்ரியா திருநங்கைகளின் தாய் அறக்கட்டளை அமைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார உறுப்பினராகவும் செயல் படுகிறார், அதுமட்டும் அல்லாது சித்திரை வெயிலில் பாதசாரிகளின் தாகம் தணிக்க கம்மன்கூழும் மோரும் விற்று பிழைப்பை நடத்திவருகிறார் . அவர் தயாரிக்கும் கம்மங்கூழ் அவ்வளவு சுவையானதாகும் . அது மட்டும் அல்லாது
கடைக்கு வருபவர்களிடம் பாசத்தோடும் பரிவோடும் நடந்து கொள்கிறார். இவரை யாரேனும் கேலி செய்துவிட்டால் உண்டு இல்லை என ஆக்கி விடுவார்.
திருநங்கைகள் என்றால் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர் என்பது இல்லாமல் சண்முகப்ரியா உயர்ந்து வருகிறார் இவருடைய லட்சியம் எல்லாம் சொந்தமாக ஒரு சிற்றுண்டி விடுதி வைக்க வேண்டும் என்பதே. கவலை வேண்டாம் சண்முக ப்ரியா உங்களது முயற்சி வென்று சிற்றுண்டி என்ன நட்சத்திர ஹோட்டலே வைக்க கூடும்...
வாழ்த்துக்கள் சண்முக ப்ரியா...
~மகேந்திரன்


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Monday, 2 April 2012

யாரும் அநாதை இல்லை~மகேந்திரன்

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில்  சாலையோரமாக பரிதாப நிலையில்  புற்று நோயால்  பலகாலம் அவதிப்பட்டு வந்த பொன்னம்மாள் வயது 92  கடந்த 4/11/11 அன்று பொது மக்கள் உதவியுடன் அன்னை தெரேசா  காப்பகத்திற்கு நான்  அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களின் பராமரிப்பில் கவனித்து வரப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது...
கடந்த சில நாட்களாக பொன்னம்மாள் பாட்டிக்கு உடல் நிலை மோசமானது மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு  சிகிச்சை பலன் அளிக்காமல் 30/03/12 மாலை அவரது உயிர் பிரிந்தது,  31/03/12 அன்று காலை 11:15 அவரது உடலை  நான்  எனது நண்பர்கள் தபசுராஜ் ,அருள் ராஜ், மகேஷ் குமார், ஸ்ரீ வசந்தா மற்றும் அன்னை தெரேசா  காப்பகம் உதவியுடன் கோவை புலியகுளம் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

உண்மையான இன்பசுற்றுலா~மகேந்திரன்,

யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சந்தோசப்படுத்தலாம் அதுவும் ஆதரவற்றவர்களை  மனதார மகிழ்விப்பது என்பது கடவுளுக்கு செய்யும்  தொண்டாகும் , முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் என்னும் குழு  இதில் உள்ள நண்பர்கள் கோவையில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தை  சேர்ந்த நூறு குழந்தைகளை மகிழ்விக்க முடிவு செய்து  அதன்படி முகநூளின் உறுப்பினர் உமா தேவி அவர்கள் உதவியுடன் அந்த ஆஷரமத்தின்  குழந்தைகளை கோவை அருகே உள்ள திரு மூர்த்தி மலை , அமராவதி ஆணை இங்கு அழைத்து செல்ல முடிவெடுத்தது ,  இந்த குழு 30/03/12 அன்று ஆஷரமத்து  நிர்வாகி சிவா ஆதமா அவர்களின் அனுமதி பெற்று 31/03/12  இன்ப சுற்றுலா பயணம் முடிவானது.
31/03/12 அன்று விடியற் காலை 5 மணிக்கு பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தில் இருந்து இரண்டு பேருந்தில் 35 சிறுமி 50 சிறுவர்கள் ஆசரமத்தை சேர்ந்த நிர்வாகிகள் 8 பேர் மற்றும் முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் குழு நண்பர்கள் ஸ்ரீ வசந்தா, சுதர்சன் , மது, நிஷா , மகேஷ் குமார் ,ஈஸ்வரி  மற்றும் உமா தேவி அவருடைய மகன் பிரவீன் , உட்பட  இன்ப சுற்றுலாவிற்கு பயணம் துவங்கியது  .
பேருந்தில் குழந்தைகளும் குழு நண்பர்களுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பேருந்து அமராவதி அணைக்கு சென்றது. ஆனால் அங்கு சின்ன ஏமாற்றம். என்னவெனில், அணையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. அதனால், குழந்தைகள் சிறிய ஏக்கத்துடன் காணப்பட்டார்கள். அங்கு சிறுவர் விளையாட்டு பூங்கா இருந்தது அதில் காப்பக நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் காலை உணவு அருந்தி விட்டு பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு ,ஊஞ்சல் விளையாட்டு ஓடி விளையாட்டு என குழந்தைகள் விளையாட அணையில் குளிக்க முடிய வில்லை என்ற கவலை மறந்தது . மதியம் 2 மணிக்கு  திரு மூர்த்தி மலைக்கு பயணம் செய்தனர் ,
அங்கு திரு மூர்த்தி  அணையில் தண்ணீர் இருப்பதை கண்டதும் குழந்தைகள் வண்டியை இங்கேயே நிறுத்த சொல்லி தண்ணீரில் ஆட அடம்பிடித்தனர் , ஆனால் மலை அடிவாரத்தில் சிவன் கோவில் இருப்பதால் கோவிலில் சாமி தரிசனம் முடித்து மதிய உணவு அருந்தி விட்டு குளிக்க உறுதி அளித்ததால் குழந்தைகள் சமாதானம் ஆனார்கள் ,
கோவிலில் குழந்தைகளுக்காக அர்ச்சனை தரிசனம்  நடந்தது , அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது . உணவு உண்டதும் குழந்தைகளின் முகத்தில் அளவில்லா புன்னகை மகிழ்ச்சி தண்ணீரில் ஆடபோகிறோம் என்று .
குழந்தைகள்  குளிப்பதற்காக தண்ணீரில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டது , நிர்வாகிகள் மற்றும் குழு நண்பர்கள் மேற்ப்பார்வையில் குழந்தைகள் தண்ணீரில்  விளையாட ஆரம்பித்தனர் , ஆஹா அவர்களின் மகிழ்ச்சியை காண்பதே மிக மகிழ்ச்சியாக இருந்தது , தண்ணீரில் ஓடி விளையாடுவது ஒருவரின் மேல் ஒருவர் ஏறி குதிப்பதும் நீச்சல் அடிப்பதும் ,அதுமட்டும் அல்லாது நண்பர்களோடு ஒன்றாய் இணைந்து  சகஜ மாய் விளையாட நாமும் குழந்தைகளாகி போனோம்.அந்த குழந்தைகள் தாம் ஆதரவற்றவர்கள் என்ற நிலை மறந்து , அதை மறக்க வைக்க செய்த நமது முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் குழு நண்பர்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது.
குழந்தைகள் மாலை 5 மணி அளவில் எல்லோரும் குளித்து விட்டு தேநீர் குடிப்பதற்காக ஒரு பக்கம் ஒதுங்கி அங்கு  இனிப்பும் காரமும் தேநீரும் வழங்கப்பட்டு இன்பச்சுற்றுல  நிறைவு கூட்டம் நடந்தது .
அதில் கலந்துக்கொண்ட முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் ஸ்ரீ வசந்தா, சுதர்சன் , மது, நிஷா , மகேஷ் குமார், உமா தேவி அவருடைய மகன் பிரவீன் பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து


1 . பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், சிறந்த மாணவர் மாஸ்டர் மணிகண்டன், மற்றும் சிறந்த மாணவி குமாரி. தாரணி அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, 2 . இந்த மகிழ்ச்சியான பயணத்திற்கு உதவி செய்த திருமதி. உமா தேவிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
3 . இந்த பயணத்திற்கு, அன்னக்கொடை மற்றும் புன்னகைதோட்டம் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்த திருமதி. ஸ்ரீவசந்தாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
4 . இந்த சுற்றுலாவிற்கு வந்த அனைவருக்கும் இனிப்புகளை தயாரித்து கொண்டு வந்த திருமதி. நிஷாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
5 . குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொண்ட, திரு. சுதர்சன், திரு. மது, மற்றும் மாஸ்டர் பிரவீண் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
6 . இந்த சுற்றுலா விசியத்தை கேள்விப்பட்டு, உடனே நமக்கு உதவிக்கு வந்த திருமதி. ஈஸ்வரி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
7 . சாலையோரம், பத்துவருடமாக ஆதரவை தொலைத்து பரிதாபமாக இருந்த பழனி என்பவரை அவரது குடும்பத்தை தேடி, சேர்க்க உதவிய திரு, மகேந்திரனுடைய நண்பர் ,திரு. மகேஷ் குமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதோடு பயணப்  பேருந்தில் ஆடல் பாடலுடன்  கோவைக்கு திரும்பினோம் .
வழக்கமாக சொல்வது தாங்க ஆனாலும் அது தான் உண்மையானதும் கூட மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விப்பதில் தாங்க இருக்கிறது,
ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் என்னும் குழு  இதில் உள்ள நண்பர்கள் இருக்கும் வரை அதற்க்கு எடுத்துக்காட்டு இந்த இன்ப சுற்றுலாவாகும்.
நன்றி
~அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம்
 ~மகேந்திரன்,

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Sunday, 25 March 2012

அருண் அநாதை இல்லை ~மகேந்திரன்

இன்று மதியம் கோவையில் இருந்து
சத்தியமங்கலம் செல்லும் அரசு பேருந்தில்
தனியாக பயணம் செய்த ஒரு சிறுவன் கணபதியில்
இறக்கி விடப்பட்டான் .யாருமற்று நின்ற அந்தசிறுவனை
எனது நண்பர்கள் கண்டு என்னிடம் சொல்ல நான் (மகேந்திரன்) அந்த
சிறுவனை அழைத்து யார் என்ன விபரம் கேட்டறிய முயன்ற
போது அவன் தனது பெயர் அருண் என்றும் தன் பாட்டி பெயர் சாந்தி
தாத்தா பெயர் வெள்ளியங்கிரி என்றும் தனக்கு அப்பா அம்மா இல்லை என்றும்
சொன்னான் .
அவன் எதற்காக தனியே வந்தான் என்பதும் அவன் எந்த ஊரில் இருந்து வந்தான் என்றும்
அவனால் சொல்ல இயலவில்லை.ஆனால்அவனது கையில் சூடு போடப்பட்டு இருப்பதால்
புண்ணான அவனது கைகளை டாக்டரிடம் காண்பித்து மருத்துவ உதவி
செய்து காவல் நிலையத்தில்


இந்த செய்தியை தகவல் அளித்து பின்னர் கார்னர் ஸ்டோன்
குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து வைத்துள்ளேன் .
அந்த சிறுவனை மேலும் விசாரித்தபோது அவன் கான்வென்ட் ப்ரைமரி  நர்சரி ஸ்கூல் என்று
அதை தொடர்ந்து எனது நண்பர்கள் ஸ்ரீ வசந்தா , முத்து ராம் , மற்றும் அருண் குமார் , இவர்களின் உதவியால் திருப்பூரில் உள்ள அந்த பள்ளிக்கு சென்று அருணை பற்றி  விபரம் கேட்டபோது அவன் இங்கு தான் படிக்கிறான் என்ற உண்மை தெரிந்தது அதன் மூலம் சிறுவன் அருண் வீட்டை கண்டு பிடிக்கப்பட்டு வீட்டிற்கு சென்று அருணின் விபரத்தை சொல்ல அருணின் அம்மா ஆனந்தி அவர்களை கோவைக்கு என்னை சந்திக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள் ,
அருணின் அம்மா 26/03/12 மதியம் ஒரு மணிக்கு என்னை சந்திக்க வந்தார்கள் ஆனால் அவர் முகத்தில் அருணை பற்றிய எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லை என்ன நிலையோ தெரிய வில்லை ஆனந்தி மகன் மீது எதோ ஒரு கோவம் மகன் அருணை  கூட சந்திக்காமல் என்னிடம் அவன் உங்களிடமே இருக்கட்டும் என்று சொல்ல, எனக்கு பகீர் என்று ஆனது நான் மற்றும் எனது நண்பர்கள்  எவ்வளவோ ஆறுதல் கூறியும் அருணை ஏற்பதாக இல்லை , காப்பகத்தில் இருக்கட்டும் என கூறி கொஞ்சநாள் கழித்து வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார் நண்பர்களே அந்த அம்மாவிற்கு அருண் மீது உள்ள கோவம் விரைவில் போக வேண்டும் தனது மகனை திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் தாய் பாசத்தை நிலை நிறுத்த வேண்டும் அதற்க்கு கடவுளை நாம் வேண்டிக்கொள்வோம்....
தற்சமையம் அருண் கோவையில் கார்னர் ஸ்டோன் ஆதரவற்ற காப்பகத்தில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறான் ...
ஒரு உண்மை

அருண் அநாதை இல்லை .

வேதனையுடன்

~மகேந்திரன்





மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Thursday, 22 March 2012

இதில் ஒரு கவலை

எத்தனையோ
உன்
நினைவுகளை நான் சுமக்கிறேன்...
அதில்
ஒன்று கூட சுமையாகவே இல்லை...
இதில் ஒரு கவலை
உன்
நினைவுகளில் ஒன்று கூட
எடை மதிப்பிட முடியவில்லையே..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Sunday, 18 March 2012

இப்படி கூட உதவலாமே.! ~மகேந்திரன்

ஆதரவற்ற இல்லங்களுக்கு நாம் போகிறோம், உணவு வழங்குகிறோம், ,துணி வகைகளை வழங்குகிறோம் ,அதற்கும் மேலாக அங்கு இருக்கும் உடல் நோய் வாய் பட்டவர்களை குளிப்பாட்டுவதும் ,தன்னால் உண்ண முடியாதவர்களுக்கு ஊட்டிவிடுவதும், மருந்திடுவதும் , இப்படி கூட செய்யலாமே...!

~மகேந்திரன்
9843344991
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

Tuesday, 13 March 2012

மகனுடன் இணைந்த கண்ணம்மாள் பாட்டி...


வழக்கம் போல நான் (மகேந்திரன்) அன்னை தெரசா காப்பகத்திற்கு அங்கு இருக்கும் ஆதரவற்ற பெரியோர்களுக்கு சேவை செய்வதற்காக 12 /03 /12  சென்றிருந்தேன் .
அங்கு கண்ணம்மாள் (வயது 80 இருக்கும்) அவரை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து அழைத்து வந்தனர். இவர் யாரும் இல்லை என பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி ஒரு நல்ல மனிதர் பாட்டியை அழைத்துக்கொண்டு வந்து காப்பகத்தில் சேர்த்துவிட்டார்கள்.
அவரிடம் நான் ,
" நீ...ங்கள் யார் எப்படி இங்கு வந்தீர்கள் ?" என கேட்க ,அவர் " என் சின்ன மகன் ராஜேந்திரன் அவன் என்னோடு சண்டை போட்டுக்கொண்டு கோவத்தில் வீட்டை விட்டு போய் விட்டான், என் மகன் பெரியவன் ராகவன் சென்னை சோழ மண்டலம். இதை தவிர வேறு தெளிவான முகவரியும் அலைபேசி எண்ணும் தெரியாது" என்றார்., ராஜேந்திரன் என்னை தகாதவார்த்தை சொல்லியதால் மனம் உடைந்து கோவையில் எனக்கு உறவினர் வீடு இருக்கிறது அவரை தேடி இங்கு வந்தேன் . ஆனால் இந்த ஊரில் எனக்கு அடையாளம் காணமுடியவில்லை , பசி பிச்சை எடுக்க மனம் இல்லை எங்காவது சாப்பாடு குடுப்பாங்களா என அலைந்தேன் பழைய சாதம் குடுப்பாங்க , அது எனக்கு ஒத்துவராமல் உடல் நலம் குன்றி போனது அரசு மருத்துவமனையில் யாரோ ஒருவர் சேர்த்துவிட்டு போனார் அதன் பிறகு நான் குணமாகி வெளியே வந்து எங்கு போவது என்று தெரியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே இருந்து விட்டேன் , அதன் பிறகு எனக்கு பசி மயக்கம் , விளித்து பார்க்க நான் இங்கு இருக்கிறேன் , என் பிள்ளைகளை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என கண்ணீருடன் சொல்ல நான் உங்கள் மகன்களை தேடி தருகிறேன் பாட்டி என கூறி அவருடைய மகன்களை தேடும் முயற்சியில் இறங்கினேன் .தொடர்ந்து அவர் கூறிய சென்னையில் உள்ள சோழமண்டலம் பகுதியில் இருக்கும் அலைபேசி எண் ஒன்றை கண்டு பிடித்து அதன் மூலம் பல எண்களுடன் தொடர்புகொள்ள , ஒருக்கட்டதில் கண்ணம்மாள் பாட்டியின் மூத்த மகன் ராகவனின் தொடர்பு கிடைத்தது , அவரிடம் விசாரிக்க அவருடைய அம்மா தான் கண்ணம்மாள் பாட்டி என உறுதியானது , அலைபேசியில் ராகவன் அம்மா என அழுத அழுகை இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,
தனது அம்மா காணாமல் போனதை தொடர்ந்து காவல் துறையில் புகார் செய்ததும் நாளிதழில் விளம்பரம் செய்ததும் , விடிய விடிய அவரை தேடி அலைந்ததும் என்னிடம் பகிர்ந்துக்கொண்டார் ,
பிறகு அவருக்கு சமாதானம் சொல்லி உடனே கிளம்பி வாருங்கள் என்று சொன்னதும் சென்னையில் இருந்து கிளம்பி இன்று 13/03/12 காலை கோவைக்கு வந்து என்னை சந்திக்க அவரை அழைத்துக்கொண்டு அன்னை தெரேசா காப்பகத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அங்கு இருக்கும் அவருடைய அம்மா கண்ணம்மாள் பாட்டியை சந்திக்கவைக்கும் போது மகன் ராகவனை சந்தித்த கண்ணம்மாள் பாட்டி கட்டித்தழுவி
அழுவதை பார்க்க அந்த நிகழ்வை பார்த்தால் கல்லும் கரைத்துவிடும் போல இருந்தது,
பாட்டி என்னை அழைத்து கையெடுத்து கும்டிட்டு நன்றி சொல்ல எனக்கும் கண்கலங்கியது பிறகு நான் பாட்டி உனக்கு சந்தோசம் தானே என்று சொல்ல பாட்டி அழுதும் சரித்தும் என்னை கட்டி அனைத்து முத்தம் தந்து ஆசீர்வாதம் வழங்கினார்,
பாட்டியின் மகன் என்னை பார்த்து உங்களுக்கு காலமெல்லாம் கடமை பட்டிருப்பேன் என்று சொல்லி , காப்பகத்தில் இருந்த கண்யச்திரிகளிடம் தனது அம்மாவை நல்ல படியாக பார்த்துக்கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி சொல்லி அங்கு இருந்த அனைவரையும் வணங்கி நன்றி சொல்லி கிளம்பும் போது அந்த பாட்டி கண்களில் ஒரு நிம்மதியை காண முடிந்தது,
மகிழ்ச்சியோடு நான் இந்த நாளில் இது போல இருந்தது இல்லை எந்தநாளும் .
எதோ ஒரு நல்ல கடமை நிறைவேற்றியதுபோல இருந்தது.
~மகேந்திரன்



மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.