Saturday, October 12, 2013

மகியின் ஹைக்கூ...





சோகம் கரைய 
நண்பன் இருந்தாலும் சரி 
கவிதை எழுததேரிந்தாலும் சரி..!


888888888888888888888888888888


பதுக்கப்பட்டது தானியங்கள் 
விதைத்த விவசாயிகள்
பட்டினியில்..!


888888888888888888888888888888


உயிர் போகும் நேரத்தில் 
உலகிற்கு ஒளி காட்டதுடிக்கும் 
தீக்குச்சிகளுக்கு 
வணக்கம்..!


888888888888888888888888888888


சேற்றில் முளைத்த 
செந்தாமரையில் தான் கலைமகளே 
வீற்றிருக்கிறாள்...

தீண்ட உனக்கு 
என்ன..?


888888888888888888888888888888


புதிதாய் அமைத்த பாதையில் 
அழிந்து போன புல்லினம் 

போர்க்கொடி தூக்கத்தேரியாமல் 
ஒரு சோகம்..!


888888888888888888888888888888


குளத்தில் மிதக்கும் 
தாமரை பூவை பறித்தாலும் 
நிலா பூவை பறிக்க 
முடியாது..!


888888888888888888888888888888


நெருப்புக்கும் 
அம்மாவின் தாலாட்டு...

ஊதும் குழலில் 
அம்மாவின் மூச்சுக்காற்று..!


888888888888888888888888888888


மனிதனின் தாக்குதலால் 
இப்போதெல்லாம் 
மின்னல் பூ 
பூப்பது அரிதாகிவிட்டது..! 


888888888888888888888888888888


கஞ்சன் கையில் இருந்து 
சிதறியது 
பருக்கைகள்...

நன்றி 
சொல்லி வாழ்த்தியது 
எறும்புகள்..!


888888888888888888888888888888


புல்லின் மீது 
வெள்ளை பூ 
பூத்திருக்கு 
சூரியன் வந்து 
களவாட..!

"பனித்துளி"


888888888888888888888888888888


நேற்று பெய்த 
மழையில் 
எங்கள் வீட்டு கிணற்றுக்கு 
தாகம் தீர்ந்தது..!







மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Anonymous said...

வணக்கம்

புல்லின் மீது
வெள்ளை பூ
பூத்திருக்கு
சூரியன் வந்து
களவாட..!
பனித்துளி"

கவிதையின் வரிகள் அழகு வாழ்த்துக்கள்

http://2008rupan.wordpress.com/2013/10/11/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0/ அன்புடன் வாருங்கள்.வாருங்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment