Sunday, March 22, 2015

கால் இழந்த 5 வயது சிறுமிக்கு உதவி ~ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
*********************************************************************
(434/ 21-03-2015)
தஞ்சாவூரைச் சேர்ந்த மெஷராஜ் கனி என்ற பெண்ணின் மகள் ஆப்ரின் 5 வயது சிறுமி இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் தன்னுடைய வலது கால் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டு கால் அகற்றப்பட்டது.
கால் இழந்த துக்கம் முடிவதற்குள் அவளின் தந்தை அப்துல் ஹக்கீம் அவர்களை நிராதரவாய் விட்டுவிட்டு எங்கோ தலைமறைவாகி விட . யாரும் ஆதரவற்ற நிலையில் இருந்த அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடர்பு கொண்டனர். அவர்களின் நிலைமையை கண்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளை அச்சிறுமிக்கு இலவசமாக செயற்கை கால் பொருத்த முன்வந்து.இன்று 21/032015 அச்சிறுமிக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாது சிறுமி வளர வளர செய்கை காலின் அளவு மாறும். அப்படி புதிதாக பொருத்தப்படும் அத்தனை செயற்கை கால்களின் செலவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையே பொறுப்பு ஏற்றுக் கொண்டது எனபதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
~ஈரநெஞ்சம்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Post a Comment