Tuesday, February 24, 2015

கலெக்டர் அலுவலகம் முன் கால் அழுகிய நிலையில்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 410 / 29-01-2015 )
கடந்த 26-01-2015 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து கால்கள் பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்த திரு. நாகராஜ் அன்பவர் ஈரநெஞ்சம் அறக்கட்டளையால் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
அவருக்கு உடன் இருக்க உறவினர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் அவரது நிலை குறித்த தகவல் அறிந்த தாயார் திடீரென மயக்கம் போட்டு விழுவிட்டார் என்றும் தன மகனை நீங்களே அனுப்பி வைக்க உதவுமாறும் நாகராஜின் தந்தை கேட்டுக் கொண்டார். எனவே ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலம் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் மனது கேட்காமல் அவரது தந்தை பாதி வழியிலேயே வந்து உடன் அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு தேனீ மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருப்பதாகவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்தார். அவரது உடல்நிலை விரைவில் நல்ல முறையில் தேறி நலம் பெற வேண்டும் என்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
நன்றி
ஈரநெஞ்சம்
Coimbatore, in front of collect office Mr. Nagaraj, who was rescued by Eeranenjam on 26-1-2015 and admitted in Coimbatore Governement. As he has no relation to take care of him, he was unable to proceed treatment.
In this situation Eeranenjam trust informed about him with his family. Suddenly his mother was affected physically and unconscious. So his father requested us to send his son safely. So, Eeranenjam trust arranged an ambulance to take him to his native. Even though his father came in middle of his journey and take care of him. Also his father informed that Mr. Nagaraj was admitted in Theni Government Hospital for treatment. Wwe pray for his health and get well soon.
Thanks
Eeranenjam Trust.





மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment