Friday, April 18, 2014

ஒரு சில மணிநேரத்தில் பூவம்மாள் உறவினர் கண்டுபிடித்து ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(294/18-04-2014)
கோவை லாலி சாலையில் இன்று 18/04/2014 ஒரு பூவம்மாள் (சுமார் 90 வயது) என்ற மூதாட்டி வழிதவறி எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் 3 நாட்களாக சுற்றிதிரிவதை கண்ட கோவையை சேர்ந்த தோழர் அறக்கட்டளை உறுப்பினர்கள் மூதாட்டியை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் . அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த பாட்டிக்கு உறவினர்கள் இருக்கிறார்களா என கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது ஒருசில மணிநேரத்தில் அந்த பாட்டியின் மகன் காசிலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் வந்து அந்த பாட்டியை அழைத்து சென்றனர் .
இதை பற்றி பூவம்மாள் மகன் காசிலிங்கம் கூறும் போது நாங்கள் சௌரிபாளையம் பகுதியில் வசித்து வருகிறோம் எனது அம்மாவிற்கு கொஞ்சம் ஞாபக மறதி , கடந்த திங்கட்கிழமை 14/04/2014 அன்று காலை வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். எங்களது சொந்த ஊர் தூத்துக்குடி அருகில் இருக்கும் ஆத்தூர் , ஒருவேளை அங்கு என்னுடைய சகோதரர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்றும் நாங்கள் அனைவரும் எல்லா இடத்திலும் தேடியபடி இருக்கிறோம் . கோவை B6 காவல் நிலையத்திலும் இவரை காணவில்லை என்ற புகார் கொடுத்துள்ளோம் . என்றும் இன்று 18/04/2014 ஈரநெஞ்சம் அமைப்பை சேர்ந்தவர்கள் உதவியால் எங்களுடைய அம்மா கிடைத்து விட்டார்கள் என்றும் தங்களது மகிழ்ச்சியை நன்றியையும் வெளிப்படுத்தி ஈரநெஞ்சம் அமைபிற்கும் மாநகராட்சி காப்பகத்திற்கும் மற்றும் தோழர் அறக்கட்டளைக்கும் தெரிவித்துக் கொண்டனர்.
மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment