Tuesday, April 29, 2014

இறந்தவரின் அடையாளம் தெரிந்தது


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services

" ******
(299/29-04-2014)



"இறந்தவரின் அடையாளம் தெரிந்தது"


26.4.2014 கோவை செல்வபுரம் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் மயங்கிய நிலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் . அவரை பற்றிய விபரம் அறியாதநிலையில் B10 காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்து ஈரநெஞ்சம் அமைப்புடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரை தேடும் முயற்சியில் ஈடுபட்டது .
https://www.facebook.com/photo.php?fbid=559879687442785&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அதன்பலனாக இன்று இறந்தவரின் மனைவி கீதா லக்ஷ்மி கண்டுபிடிக்கப்பட்டு இறந்தவர் இவரது கணவர் என்பது உறுதிசெய்யப்பட்டது . மேலும் அவரிடம் விசாரித்ததில் இறந்தவரின் பெயர் மணிகண்டன் என்றும் பெயிண்டர் வேலை பார்த்துவந்ததாகவும் , இவர்களுக்கு கீர்த்தனா வயது 15 பிரதீபா வயது 11 என்ற இரு குழந்தைகள் இருப்பதாகவும் கோவை தொண்டாமுத்தூர் அருகில் குளத்துப் பாளையம் பகுதியில் வசித்து வருவதாகவும் , கடந்த ஆறேழு வருடமாக மணிகண்டன் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வீட்டிற்கு வராமல் வெளியே தங்கி இருந்து வந்ததாகவும் . குழந்தைகள் அழைத்தால் அவ்வப்போது வீட்டிற்கு வந்து போனதாகவும் தெரிவித்தார் . வீட்டிற்கு வராமல் இருந்தாலும் எங்களோடு பாசத்தோடு இருப்பார் . இவர் இறந்தது அறியாதநிலையில் தற்போது கீதா லக்ஷ்மி மற்றும் குழந்தைகள் இருவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் .
இதனைதொடர்ந்து இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு B10 காவல் துறையும் மற்றும் ஈரநெஞ்சம் அமைபினரும் , அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர் .

பிறகு மாலை 3 மணியளவில் சொக்கம் புதூர் மின் மயானத்தில் உறவினர்கள் மணிகண்டனின் உடலை தகனம் செய்துவிட்டு விடைபெறும்போது B10 காவல் துறையினருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment