Sunday, February 23, 2014

சாலையில் காயத்துடன் ஆதரவற்று இருந்தவருக்கு முதலுதவி ~ மகேந்திரன்

சில நாட்களுக்கு முன்பாக உக்கடம் பகுதியில் சாலையில் ஆதரவற்று ஒரு மூதாட்டி வலது கை இழந்த நிலையில் பரிதாபமாக இருந்தார், அவருக்கு பாதுகாப்புக் கொடுக்க அந்த மூதாட்டியை அழைத்துவந்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு அங்கு சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அந்த அம்மாவின் தலையில் எதோ காயம் இருக்கும் போல தலை வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். முடி நிறைய இருந்ததால் காயம் தெரியவில்லை தலையில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தது அதிக துர்நாற்றம் வீச, தலையில் முடி வெட்டி விடலாம் என்று முடியை வெட்டும் போதுதான் தெரிந்தது அத்தலையில் இருந்த காயத்தில் புழுக்கள் இருந்தது, பாவம் அந்த அம்மா வலியை எப்படி பொறுத்துக்கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை , முடிதிருத்தம் செய்து காயத்தில் இருந்த புழுக்களை எல்லாம் எடுத்துவிட்டு காயத்திற்கு மருந்து போடப்பட்டு உள்ளது, இப்படி ஒரு வேதனை யாரும் அனுபவிக்க கூடாது. அந்த வயதான அம்மா விரைவில் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.







நன்றி...

2 comments:

  1. உங்கள் சேவை உன்னதமாக உள்ளது மகி

    ReplyDelete
  2. சாலையில் காயத்துடன் ஆதரவற்று இருந்தவருக்கு முதலுதவி ~ மகேந்திரன்
    உங்கள் மகத்தான செயல்களுக்கு வாழ்த்துகள் திரு Eeram Magi. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete