Sunday, November 10, 2013

காப்பகத்தில் இருந்த முத்துராஜ் உறவினர்களை கண்டுபிடிக்கப்பட்டது~ ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(230/10/11/13)

முத்துராஜ் வயது 32 கோவை குனியமுத்தூர் காவல் துறையினரால் கடந்த 3/11/13 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் மனநிலை சரி இல்லாத நிலையில் சேர்க்கப்பட்டார் . காப்பகத்திற்கு வந்த முத்துராஜ் மனநிலை சரி நிலையால் அங்கு இருப்போர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் , இதனால் அவர் யார் என்ன விபரம் எதனால் இப்படி வந்தார் என்ற நிலை அறியாததால் , ஈரநெஞ்சம் அமைப்பினரை கோவை மாநகராட்சி காப்பகத்தினர் தொடர்பு கொண்டு முத்துராஜ் பற்றி தெரிவித்தனர். மேலும் அவரது குடும்பத்தினரை தேடி கண்டுபிடிக்குமாறு கேட்டு கொண்டனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் முத்துராஜ் நேரில் கண்டு நீண்ட நேரம் அவரிடம் பேசி விசாரித்த போது அவரிடம் இருந்து இவர் பெயர் முத்துராஜ், தந்தை பெயர் ஐயப்பன், மனைவி பெயர் சிந்து மோல், மகன் சிவா மாமா சந்தோஷ், முகவரி என. நடுதுருத்தி பள்ளம், கல்லார் போஸ்ட், வட்டையார் பகுதி, மூணார் , தேவிகுளம், இடுக்கி மாவட்டம், என்ற விபரம் திரட்டப்பட்டது, அதை வைத்துக்கொண்டு கடந்த 7 தேதி ஈரநெஞ்சம் முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் தகவலை வெளியிட்டு முத்துராஜின் உறவினரை தேடும் முயற்சியில் இறங்கியது. https://www.facebook.com/photo.php?fbid=486144431482978&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து நேற்று 9/11/13 அன்று கேரளா மாவட்டம் வட்டையார் பகுதி காவல்துறையினர் மூலம் முத்துராஜ் அவரின் சகேதரர் சசுதர்சனன் தொடர்பு கிடைக்கப்பட்டு அவரிடம் முத்துராஜ் பற்றி விபரம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் வரவழைக்கப்பட்டார். தனது அண்ணன் இருப்பதை அறிந்த மகிழ்ச்சியில் விரைந்த சுதர்சனனிடம் மனநிலை பாதித்த முத்துராஜ் ஈரநெஞ்சம் அமைப்பால் ஒப்படைக்கப்பட்டார்.



இதை பற்றி முத்துராஜ் அவர்களின் சகோதரர் சுதர்சனன் கூறும் போது.http://youtu.be/BtykhsfHQZM இவர் தனது அண்ணன் என்றும் கடந்த ஒருமாதகாலமாக அவருக்கு மனநிலை சரி இல்லாமல் போனதாகவும் அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் , கடந்த 1 /11/13 அன்று திடீர் என்று வட்டையார் பகுதியில் அவரது மாமனார் வீட்டில் இருந்தபடி காணாமல் போனதாகவும் கூறினார் , இவரை காணாமல் வீட்டார் அனைவரும் பல இடங்களில் தேடி வந்ததாகவும், ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் தற்போது கிடைக்கப்பட்டார். , இவரை அழைத்து சென்று தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார். மேலும் தனது சகோதரரை மீட்டு கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு , கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் பெரும் நன்றி தெரிவித்து கொண்டார் .

மீண்டும் ஒரு உறவை தேடி தந்த மகிழ்ச்சியோடு விடை பெற்று கொண்டது ஈரநெஞ்சம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Muthuraj, Age 32, was admitted in Coimbatore corporation home with mentally disordered condition by Kuniyamuthur police on 3-11-2013, Due to mentally disordered stage he torturing the all the people in home. Home management didnt know about him and so they informed to Eeranenjam trust to find the details about him. Also they requested hm to find his family. After a long time inquiry of Eeraenjam with him, they knew the details that his father's name is Mr. Iyyappan, wife Mrs. Sinthu mol, Son Siva and his uncle Mr. Santhosh and his address is Naduthuruthi pallam, Kallar post, Vattaiyaar, Moonaar, Devi kulam, Idukki districrt. With these details Eeranenjam tried to find his family using internet webpages such as facebook.

Further to their effort, Eeranenjam found his brother Mr. Sutharsanan with the help of Vattaiyaar police and Eeranenjam informed the details about Muthuraj with his brother Sutharsanan. Immediately he came and felt very happy when he saw his brother. Eeranenjam handed over Mr. Muthuraj to his brother.

When Mr. sutharsanan told about his brother, He was mentally disordered for a month and he was taking treatment for the same. Unexpectedly he was missed from his Uncle's home on 1-11-2013 from Vattaiyaru. They searched him in so many places and they got him by Eeranenjam trust. He assured that he will give the treatment to his brother. He told thanks to Eeranenjam to found his brother. Eeranenjam also felt very happy to joined one more person with his family.

Thanks,
Eeranenjam.




மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment