Sunday, November 10, 2013

கோவை அரசு மருத்துவமனையில் , பசி மயக்கத்தில் இருந்தவரை மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு.~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(229/09/11/13)

திரு. பாலன் அவர்கள், வயது 70. இவர் கோவை அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் யாரும் கவனிப்பாரின்றி இருந்தார். பொதுமக்களில் சிலர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு 09/11/13 அன்று காலை தகவல் கொடுத்தனர். உடனே வந்த ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டனர். பசியால் மிகவும் சோர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்து முதலுதவி செய்யப்பட்டது. ஈரநெஞ்சம் அவருக்கு உணவு கொடுத்து அவர் சற்று உடல்நிலை தேறிய பின் அவரை பற்றிய தகவல்களை விசாரித்தனர்.

இவர் கடந்த 4 வருடங்களாக கோவையில் ஒரு காப்பகத்தில், தங்கி அங்கே சமையல் வேலை செய்து கொண்டு அங்கேயே இருந்து வந்தார். சில சூழ்நிலை காரணமாக அந்த காப்பகம் தொடர்ந்து செயல்படவில்லை. எனவே அவர் அங்கே இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. பின்னர் சாப்பிட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவானது. ஆனால் அதை விரும்பாத அவர் சாப்பிடாமலே இருந்திருக்கிறார். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் யாரோ சிலர் இவரை அரசு மருத்துவமனை வளாகத்தில் விட்டு சென்று விட்டனர். கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக சரியான உணவு இல்லாமல் இருந்ததால் நடக்க்கவும் முடியாமல் நினைவு தப்பிய நிலையில் இருந்தார். இந்நிலையில் தான் அவரை மீட்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் அவருக்கு உணவும் முதலுதவியும் அளித்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து விட்டனர். நல்ல பாதுகாப்பும் பராமரிப்பும் ஏற்படுத்தி தந்த ஈரநெஞ்சம் அமைப்புக்கு பாலன் கண்ணீருடன் நன்றி தெரிவித்து கொண்டார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Baalan, aged about 70 years was found in Coimbatore Goverment hospital campus without conscious and very critical health condition. public informed about him to Eeranenjam trust. Eeranenjam came to spot and rescue balan and admitted in hospital for first aid and treatment. Also they give food to him immediately.

When they inquired abut him, he is from Coimbatore and was stayed in Private home for last 4 years as a cook. Once due to some critical situation, the home was closed. And then balan came out from home and he unable to survive. He didnt like to beg for food. Due to this situatin he became unwell and unconscious. Some of the people taken him to Goverment hospital and left him. In this situation, Eeranejam taken over him and after first aid treatment and food and then admitted him at Coimbatore corporation home. He felt very thank to Eeranejam for his care and help.

Thank you.
~Eera Nenjam

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment