Sunday, October 06, 2013

பசியால் தவித்த முதியவரை மீட்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(212/2013)
இன்று 06-10-2013, காலை கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் கிட்டத்தட்ட மயக்க நிலையில் மிகுந்த பசியுடன் காணப்பட்டார். அவர் போவோர் வருவோரிடன் உணவு கேட்டுக் கொண்டிருந்தார். ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு உணவும் முதலுதவியும் வழங்கினர். பின்னர் அவர் கூறும்போது அவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சுண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். அவருக்கு உறவிர்களும், மகனும் உள்ளனர். அவரது மகன் கோவை PSG கல்லூரியில் பணி புரிவதாக சொன்னார். ஆனால் அவர் தன் மகன் பெயரை சொல்ல மறுத்து விட்டார். இவரை ஈரநெஞ்சம் அமைப்பினர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு 9080131500, 9843344991. என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


Today morning 06-10-2013, an old man, aged about 90 years was founed in almost unconscious stage with heavy hungry in Coimbatore Gandhipuram area. He was asking food with pedestrians. Eeranenjam people found him and gave food and first aid treament. He told that he is from Sundambalayam near Thondamuthur area. He has relations and son. His son is working in PSG college and he refused to tell his son's name. Then eeranenjam people admitted him in Coimbatore corporation orphanage home.

If anyone know about him kindly contact us in the numbers 9080131500, , 9843344991.
~Thanks
Eeraneanjam

மேலும் தன்னை பற்றி முத்துக் குமார் ஐயா சில தகவல்கள் கூறினார்.
தான் கோவை வரதராஜ மில்லில் பணியாற்றியதாகவும் . தன் மகன் PSG டெக் கில் வேலை பார்ப்பதாகவும் கூறி உள்ளார்.
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment