Monday, January 14, 2013

கொண்டாடும் போது கொஞ்சம் கொடுத்தாடலாமே...

உலக தமிழர்கள் அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் . பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களும் குதூகலங்களும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் . அதுவும் தீபாவளி , பொங்கல் என்றாலே கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு களை கட்டும் இதில் ஒரு ஆனந்தம் நமக்குள் இருக்க இதுதான் பண்டிகை என்று இருந்தேன் அந்த சமயம் கடந்த தீபாவளி திருநாளில் பண்டிகை என்றால் கொண்டாடுவது இல்லை கொடுத்தாடுவது என்று சொன்ன Sita Lakshmi மற்றும் Ananthalakshmi Rajasekharan இவர்களுடைய வரி என்னை மிகவும் கவர்ந்தது, வழக்கமாக நான் என் நண்பர்கள் மட்டும் இப்படி பட்ட தினங்களில் காப்பகங்களுக்கு போய் அங்குள்ள குழந்தைகள் , மற்றும் முதியவர்களுடன் பொழுதை கழித்து வருவோம் , ஆனால் அவர்களுடைய இந்த வரிகள் நாம் ஏன் கடை பிடிக்க கூடாது என்று என் குடும்பத்துடன் எடுத்த முடிவில் இந்த பொங்கல் திருநாளில் திருநங்கை வைஷ்ணவி அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி , புது உடை எடுத்து கொடுத்து வைஷ்ணவி அவகளை உபசரித்து வழி அனுப்பி வைத்தோம் .
என்ன அழகான பண்பு கொண்டவர்கள் என்று அவங்களுடன் நல்லமுறையில் பழகும் போதுதான் தெரியவருகிறது அவர்களும் மனிதர்கள் தான்... யாரும் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லைங்க , இதுபோல உங்களது வாழ்விலும் வரும் சுபதினங்களை கொண்டாடும் போது கொஞ்சம் கொடுத்தாடலாமே...
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment