Friday, January 11, 2013

திருநங்கைகள் ஆனாலும் எங்களாலும் நல்லது செய்ய முடியும் ~ஈரநெஞ்சம்


கோவை காந்திமாநகர் பகுதியில் வயதான ஒரு பெரியவர் (கந்தசாமி) தெருவில் ஆதரவற்று இருந்ததைக் கண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி 09.01.2013 அன்ற...ு எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தனர். எங்கள் அமைப்பு அவரை, கோவை B6 காவல் துறையின் அனுமதி பெற்று, கோவை சாய் ஆதரவற்றோர் காப்பகத்தில் அந்த திருநங்கைகள் மூலமாகவே சேர்த்துள்ளது.
மேலும் ஒதுக்கப்பட்ட இனம் என்று யாரும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் ஈரநெஞ்சம் செயல்பாடுகளைக் கண்டு தாங்களாலும் சமூக பணியில் ஈடுபட முடியும், என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி இருவரையும் ஈரநெஞ்சம் மனதார பாராட்டுகிறது.
~ நன்றி 129/2013
(ஈர நெஞ்சம்)
https://www.facebook.com/eeranenjam


Both Priya and Vaishnavi, thirunangais, informed Eera Nenjam on 09.01.2013 about an old orphaned (Mr. Kanthasamy) man on the street of Gandhimanagar, Coimbatore. We, after getting the proper permission from B6 Police Station, helped him admitted in Sai Home, Coimbatore, through Priya and Vaishnavi. After seeing the secular activities of Eera Nenjam, both of them have involved in such public help and we appreciate their timely help.
Thanks 129/2013
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

உதவி செய்ய நல்மனம் மட்டும் போதும் .பாலினம் அல்ல .என்று நிருபித்த ,பெரும் உதவி புரிந்த இரு திருநங்கைகளுக்கும் ,பதிவை பகிர்ந்த மகி அவர்களுக்கும் ,என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

Post a Comment