Wednesday, September 05, 2012

என் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்காக கூறிய கதை .

Photo: ஒரு ஊரில் முனிவர் இருந்தார் , அவருக்கு பொதுமக்கள் பழம் உணவு என கொடுத்துவந்தனர் முனிவர் நல்ல உபதேசங்களை மக்களுக்கு கூறிவந்தார் , முனிவரை பிடிக்காத ஒருவர் முனிவர் முன் வந்து தகாத வார்த்தைகளால் ஏசிவந்தார், ஆனால் முனிவர் அந்தநபர் கூறுவதை கண்டுக்கொள்ளாமல் இருப்பார் , இப்படியே பலமுறை அந்த நபர் தகாதவார்தையால் திட்டு பேசுவதையும் , முனிவர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதையும் கவனித்த பொதுமக்கள் முனிவரிடம் கேட்டார்கள்:

"அந்த நபர் உங்களை இப்படி திட்டி வருகிறார் நீங்கள் என் கண்டுக்கொள்ளாமல் இருகின்றீர்கள்" என்று

அதற்க்கு முனிவர் : "நீங்கள் கொடுத்த பழம் , உணவு எல்லாம் நான் வாங்கிக்கொண்டேன் , நான் வாங்கிகொண்டதால் அது எனக்கு பயனாகிற்று , ஒருவேளை நான் வாங்காமல் இருந்தால் அது உங்களுக்கே பயனாகி இருக்கும் இல்லையா ,
அது போலதான்
அந்த நபர் கூறியது எல்லாம் நான் வாங்கிகொள்ளவே இல்லை அது அவருக்கே பயனாக   இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்" என்றார்,
முனிவர் கூறியதை கேட்டதும் அந்த ஊர் போது மக்கள் யாரையும் தீய தகாதவார்தையால் திட்டுவதை நிறுத்திவிட்டார்கள்..!
~ என் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்காக கூறிய கதை .
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

ப.கந்தசாமி said...

வாழ்க்கைக்கு மிகவும் தேவையான அறிவுரை.

Post a Comment