Sunday, March 25, 2012

அருண் அநாதை இல்லை ~மகேந்திரன்

இன்று மதியம் கோவையில் இருந்து
சத்தியமங்கலம் செல்லும் அரசு பேருந்தில்
தனியாக பயணம் செய்த ஒரு சிறுவன் கணபதியில்
இறக்கி விடப்பட்டான் .யாருமற்று நின்ற அந்தசிறுவனை
எனது நண்பர்கள் கண்டு என்னிடம் சொல்ல நான் (மகேந்திரன்) அந்த
சிறுவனை அழைத்து யார் என்ன விபரம் கேட்டறிய முயன்ற
போது அவன் தனது பெயர் அருண் என்றும் தன் பாட்டி பெயர் சாந்தி
தாத்தா பெயர் வெள்ளியங்கிரி என்றும் தனக்கு அப்பா அம்மா இல்லை என்றும்
சொன்னான் .


அவன் எதற்காக தனியே வந்தான் என்பதும் அவன் எந்த ஊரில் இருந்து வந்தான் என்றும்
அவனால் சொல்ல இயலவில்லை.ஆனால்அவனது கையில் சூடு போடப்பட்டு இருப்பதால்
புண்ணான அவனது கைகளை டாக்டரிடம் காண்பித்து மருத்துவ உதவி
செய்து காவல் நிலையத்தில்



இந்த செய்தியை தகவல் அளித்து பின்னர் கார்னர் ஸ்டோன்
குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து வைத்துள்ளேன் .
அந்த சிறுவனை மேலும் விசாரித்தபோது அவன் கான்வென்ட் ப்ரைமரி  நர்சரி ஸ்கூல் என்று


அதை தொடர்ந்து எனது நண்பர்கள் ஸ்ரீ வசந்தா , முத்து ராம் , மற்றும் அருண் குமார் , இவர்களின் உதவியால் திருப்பூரில் உள்ள அந்த பள்ளிக்கு சென்று அருணை பற்றி  விபரம் கேட்டபோது அவன் இங்கு தான் படிக்கிறான் என்ற உண்மை தெரிந்தது அதன் மூலம் சிறுவன் அருண் வீட்டை கண்டு பிடிக்கப்பட்டு வீட்டிற்கு சென்று அருணின் விபரத்தை சொல்ல அருணின் அம்மா ஆனந்தி அவர்களை கோவைக்கு என்னை சந்திக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள் ,

அருணின் அம்மா 26/03/12 மதியம் ஒரு மணிக்கு என்னை சந்திக்க வந்தார்கள் ஆனால் அவர் முகத்தில் அருணை பற்றிய எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லை என்ன நிலையோ தெரிய வில்லை ஆனந்தி மகன் மீது எதோ ஒரு கோவம் மகன் அருணை  கூட சந்திக்காமல் என்னிடம் அவன் உங்களிடமே இருக்கட்டும் என்று சொல்ல, எனக்கு பகீர் என்று ஆனது நான் மற்றும் எனது நண்பர்கள்  எவ்வளவோ ஆறுதல் கூறியும் அருணை ஏற்பதாக இல்லை , காப்பகத்தில் இருக்கட்டும் என கூறி கொஞ்சநாள் கழித்து வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார் நண்பர்களே அந்த அம்மாவிற்கு அருண் மீது உள்ள கோவம் விரைவில் போக வேண்டும் தனது மகனை திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் தாய் பாசத்தை நிலை நிறுத்த வேண்டும் அதற்க்கு கடவுளை நாம் வேண்டிக்கொள்வோம்....
தற்சமையம் அருண் கோவையில் கார்னர் ஸ்டோன் ஆதரவற்ற காப்பகத்தில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறான் ...


ஒரு உண்மை

அருண் அநாதை இல்லை .



வேதனையுடன்

~மகேந்திரன்





மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

5 comments:

கோகுல் said...

அந்த சிறுவனின் கையில் சூடு போடுமளவுக்கு எப்படி எண்ணம் வந்ததோ?

விரைவில் அந்த சிறுவனுக்கு நல்ல வழி கிடைக்கட்டும்.

Anonymous said...

Nawinprasad,
Vanakam friends,
Nan intha blockai padithavudan thiru mahi avarkalai thodarbukonden enal mudintha uthavikalai seiyalam endru thodarpu konden apothu avar antha siruvanin thayaridam pesikondirikirom endru thagaval thanthar manam nimathiyudan nan matra velaiku sendren.

ஸ்ரீ வசந்தா said...

arun anathai illai..avan anbaana ungalidam irukkirane..

Unknown said...

மனதை கலங்க வைத்த செய்தி! குழந்தையில்லாதவர்கள் ஏக்கத்துடன் வாழ இவர்களுக்கு இந்த பாக்கியம் இறைவன் எப்படி கொடுத்தான்?

Anonymous said...

You should complain about this to the Police.
There is something more to it.
I feel so sad for this boy.

Magi and Friends.. there is no word to describe my respect to you guys... may god be with you all the time

Post a Comment