Friday, February 10, 2012

தோற்கும் போது அனுபவிக்கிறேன்..!

பூ
இல்லாத வானம்
போல...
நீ இல்லாத தினம் வீண்..♥



நீ
முகம் துடைத்த
கைக்குட்டையில்
ஒட்டி இருந்தது
சில
முத்தங்கள்...
பொறாமையில்
போராடுகிறது
என்
கன்னங்கள்..♥


எனக்கு
சொந்தமான ஒன்றை
மற்றவர்கள்
பயன்படுத்தினால்
எனக்கு
பிடிக்காது.
அதனால்தான்
உன் ஆடைகளின் மீது கூட
எனக்கு கோபம்..♥


தோல்வியில்
கூட சுகம்
இருந்தது...
அது
அன்பு கொண்ட உன்னுடம்
தோற்கும் போது
மட்டும்தான்
அனுபவிக்கிறேன்..!


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment