Saturday, January 14, 2012

இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே~மகேந்திரன்

ஜனவரி 1 , இவர் பெயர் குமார் வயது 35 இருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவில்லாமல் இருந்தார்  , இவருக்கு பெற்றோர்கள் இல்லை ,ஒரு விபத்தில் இவருக்கு அடி பட்டு இவருடைய நண்பர்கள் மருத்துவமனையில்  கொண்டு வந்து விட்டு சென்று விட்டனர் ,  அப்போது  இவர் கோமா நிலையில் இருந்தார்  ,குமாரை நீங்கள் ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என கோவை அரசு மருத்துவமனையில் இருந்து குமார் அவருக்கு வைத்தியம் செய்யும்  nurse கேட்க  ,  கோவையில் எந்த காப்பகத்திலும் இவருக்கு இடம் கிடைக்க வில்லை, காரமடை "அன்பு மலர்" முதியோர் காப்பகம் இவருக்கு ஆதரவு தருவதாக முன் வந்தது  , அதனை தொடர்ந்து அவர் மேலும் உடல் நலம் குன்றிவிட்டார், ஆகையால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடியவில்லை , நான் அடிக்கடி மருத்துவ மனை சென்று குமாரின் உடலை நிலையை சந்தித்து வந்தேன்,  ஜனவரி 6 காலை 10 மணியளவில் நான் குமாரை சந்திக்க சென்று இருந்த போது  குமார் நிலைமை மிகவும் மோசம் இருந்தது  சற்று நேரத்திலேயே என் கண்முன்னர் அவர் உயிர் பிரிந்தது , பிறகு மருத்துவமனை அதிகாரிகளிடம் நான் குமாருக்கான அலுவலக பணிகளை முடித்து விட்டு எனக்கு தகவல் குடுங்கள் நான் நேரில் வந்து குமாரின் உடலை எங்களது நண்பர்கள் மூலமாக தகனம் செய்ய வருகிறோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து , அதனை தொடர்ந்து காவல்துறை குமாரை பற்றி பத்திரிக்கை வாயிலாக  பொதுமக்களுக்கு குமார் இறந்த செய்தியை அறிவித்துள்ளது 13 /01 /12 அன்று வரை ஒருவாரகாலமாகியும்  குமாரை தேடி ஒருவரும் வரவில்லை ,பிறகு காவல் துறை துணை ஆய்வாளர் மாசிலாமணி என்பவர் என்னை அழைத்து குமாரின் உடலை என்னை பெற்றுக்கொள்ள சொல்ல 13 /01 /12 அன்று மதிய ஒருமணியளவில் குமாரின் பிரேத உடல் காவல்துறையினர் மூலம் பெற்றுக்கொண்டு எனது நண்பர் மோகனசுந்தரம்  துணைக்கு வந்தார் மற்றும் உதவும் தோழர் அறக்கட்டளை நண்பர் பழனி உடன் வந்தார் , இவர்களின் உதவியுடன்   13 /01 /12 மதியம் இரண்டுமணிக்கு கோவை புளிய குலம் மயானத்தில் குமாரின் உடல்  நல்லடக்கம்  செய்யப்பட்டது .
இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே...
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

3 comments:

KOMATHI JOBS said...

God is there..,

Anonymous said...

So heartening to see that there are folks like you! Please keep up the good work.

-Dinesh

bbk said...

God Bless You. Keep up the great work.

Post a Comment