Thursday, December 22, 2011

நினைவுகளுக்குள்ளேயே ஒளிவது தவிர...

பூட்டை போட்டு
பூட்டிவைத்தாலும்
புகை
நின்னாலும்
காதல்
நிற்காது..♥


உன்
கோபத்தை
கொஞ்சம் காட்டு
மார்கழி
சூடேரட்டும்..!



காதலில்
நீ
சத்யாக்கிரகம் செய்கிறாயா..?
சம்ஹாரம் செய்கிறாயா..?
புரியவில்லை..!

 
ஒரு
காகித தொழிற்சாலையை
இழுத்து மூடினாலும்..!
உனக்காக
நான் எழுதும்
கவிதை முடிவடையாது..♥

உன்னை
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்
அதுவும்
போதையை தான் தரும்..♥


உன்னை
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்
 அதுவும்
போதையை தான் தரும்..♥



கஷ்டங்கள் இல்லாமல்
கடவுளை
வழிபடுவது இல்லை..!
சண்டைகள் இல்லாமல்
காதலை
கொண்டாடுவதும் இல்லை..♥



பூக்களை
அலங்கரிக்க அதிகாலை ,
பனித்துளியை
அனுப்புகிறது..!
உன்னை
அலங்கரிக்க
நான்
கவிதைகளை அனுப்புகிறேன்..♥



உன்னை விட்டு பிரியும்
பாதைகள்
எல்லாம்
உன்னிடமே சேர்கிறது...
உன்னைவிட்டு
எப்படி
பிரியமுடியும்..♥



நீ
கைகுட்டையில்
முகம் துடைக்கும் போதெல்லாம்
கைக்குட்டையின்
மீது
 பொறாமை..!
உன்
வியர்வை
அதில் பதிகிறதே..♥



நிலாவிற்கு
துணையாக
நட்சத்திடங்கள் வருவதுபோல...
உன்
நியாபகத்திற்கு
துணையாக கவிதைகள் வாடுகின்றன..♥


உன்
சுவாசத்தில்
வாழும் உயிர் என்னிடம்..!
அதை பொறுக்காமல்
என்னை
நிராகரிக்கும் இதயம் உன்னிடம்..!





போன ஜென்மத்தில்
உன்
கூந்தல் அரியணை
ஏறி
இருக்கும் போல
இந்த பூக்கள்...
உன்
வாசத்தையும்
உன்
வண்ணத்தையும் கொண்டுள்ளது..♥



என்
தெருவில்
எரியாத விளக்குகள்
என்
காதலுக்கு
முகவரி சொல்கிறது..!


உன்
நினைவுகளில் இருந்து
என்னால்
தப்பிக்க முடியாது..!
உன்
நினைவுகளுக்குள்ளேயே
ஒளிவது தவிர
வேறு வழியும்
இல்லை..♥



மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

சசிகலா said...

உன்
நினைவுகளுக்குள்ளேயே
ஒளிவது தவிர
வேறு வழியும்
இல்லை..♥
அருமை

Post a Comment