Tuesday, November 29, 2011

நீ வருவதாக சொல்லிப்பார்...

புத்தகம் இருந்தால்தான்
நூலகமா..?
நீ
நூலிடை கொண்ட
நூலகம்..♥

 
நீ
நிலாவிடம்
வருவதாக சொல்லிப்பார்...
உன்னை
சந்திக்கும் சந்தோசத்தில்
பூமியை போல
நிலாவும்
தனக்கு தானே
சுற்ற ஆரம்பித்துவிடும்..♥


 
நார்வே நாட்டில்
இரவு இல்லையாம்...
இதை
கேட்டதும்
சலிப்பே இல்லாத
உன்
அன்பு முகம் தான்
நியாபகத்திற்கு
வந்தது..♥


 
உனக்கு
இவ்வளவு தற்பெருமை
ஆகாது...
எல்லோரிடமும்
என் கவிதை அழகு என்கிறாய்
நீ
அழகி
என்று யாருக்கும்
தெரியாதா..?


 
இரவினிலும்
வானவில் தெரியுமா
என வியக்க வேண்டாம் ...
அவள்,
அவளுடைய
காய்ந்த துணிகளை
எடுக்க
மாடி உலா
வந்திருக்கிறாள்..♥


 
 
பசி
வந்தால்
பத்தும் மறந்து போகும்..!
காதல்
வந்தால்
அந்த
பசியும் மறந்து போகும்..♥


 
 
உன்
குடைக்குள்
புகமுடியாமல்
தவிக்கும் மழைத்துளி போல..!

உன்
இதயத்திற்குள்
புகமுடியாமல்
தவிக்கும் என்னை போல..!

உன்
நிழலுக்குள்
புகமுடியாமல்
என்
நிழலும் தவிக்கிறது..♥


 
கனகாம்பரம் பூவில்
வாசம்
இல்லை...
கனகாம்பரம்
பூ போட்ட
என்
சட்டையில்
உன் வாசம்..♥

 
அது
புள்ளியல்ல
என் கண்கள்..!
நீ
போடும் கோலத்தில்
என்
கண்கள் சிக்கி கொண்டது..♥


 
நீ வந்து போகும்
கனவில்
உன்னை படம் எடுத்து
உன்
அருகினில் வைத்து
நீ
அழகா இல்லை
கனவினில் வரும்
நீ
அழகா என்று பார்க்க வேண்டும்..♥

 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment