Tuesday, August 30, 2011

தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தந்த மறுவாழ்வு

எத்தனையோ பத்திரிகை துறை இருக்கிறது , தினம் ஒரு பத்திரிக்கையும் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறது...
சில பத்திரிக்கைகள் அரசியலை சார்தே இருக்கிறது...
இன்னும் சில பத்திரிக்கைகள் சினிமாவை மையப்படுத்தியே வளர்கிறது,
அத்தகைய பத்திரிகை சார்ந்த நிருபர்களும் நல்ல செயல்பாடுகளை வெளிபடுத்த  முன்வருவது இல்லை...
இதனால் பல சமுதாய வளர்ச்சிக்கு இடையூறாகவும் பல நல்ல மனிதர்களை மறைக்கவும் படுகிறார்கள்,
பத்திரிகை துறை என்பது மக்களை சார்ந்து இருக்க வேண்டும் மக்களின் குறைகளை எடுத்துரைக்கும் மக்களின் தோழனாக இருக்க வேண்டும்,
அதற்க்கு எடுத்துக்காட்டாக கோவை  இந்தியன்  எக்ஸ்பிரஸ் விளங்குகின்றது...
ஒரு சமயம் ரத்தினபுரியை சேர்ந்த மாலா என்னும் உடல் ஊன முற்ற பெண்ணை பற்றி அவளுடைய இயலாமையை பற்றி M.Rafi Ahmed அவர்களால் கட்டுரை எழுதியதில்
அந்த மாலா விற்கு அரசு சார்பாக மாதம் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகை கிடைக்க வழிவகுத்தது, அதுமட்டும் அல்லாது மாலா அப்பளம் வியாபாரம் செய்து வருவதால் பக்கத்தில் இறக்கும் சில உணவு விடுதிகல்லில் இருந்து மாலாவிடம் அப்பளம் வாங்கிசெல்கிறனர், வறுமையில் வாடிய அந்த மாலாவின் குடும்பம் இப்போது புன்னகையில் வாழ்கிறது...

அதே போன்று சில வாரங்களுக்குமுன் போலீஸ் ஆவதே தன்னுடைய லச்சியமாக வாழ்த்த ஏழ்மை குடும்பத்தை சேர்த்த காளிசாமி அவருடைய போதாதநேரம் பேருந்து விபத்தில் உடல் உறுப்புக்கள் செயலிழந்து மருத்துவ செலவிர்க்காகவே தனது சொத்துக்களை இழந்து கடனுக்குமேல் கடன் வாங்கி , கடன்தொல்லையால் தனது சகோதரன், சகோதரிகள் படிப்பை இழந்து , காளிசாமியின் குடும்பமே தற்கொலைதான் தீர்வு என்னும் முடிவெடுத்த நிலையில் தினமணி மற்றும்
இந்தியன்  எக்ஸ்பிரஸ், V. பழனியப்பன் அவர்களால்  தக்கநேரத்தில் வெளிவந்த கட்டுரையால் காளியப்பன் குடும்பத்தை கடவுளைப்போல காப்பாற்றித்தன்தது,
சக்திநிறுவனம் காளிசாமியின் கட்டுரை படித்துவிட்டு காளிசாமியின் உடன் பிறந்தவர்களின் படிபிர்கான  தொகை சுமார் 4,00,000 (நான்கு லச்சம் ரூபாய்) தாங்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது,
அதன்படி முதல்கட்டமாக கடந்தவாரம் 25/08/11 அன்று காளிச்சமியின் உடன் பிறந்தவர்கள் மீண்டும் படிப்பை தொடர படிப்பிற்காக  10000 பத்தாயிரம் ரூபாய் வழங்கியது,

அதுமட்டும் இல்லாது காளிசாமியின் கட்டுரையை படித்துவிட்டு கோவை மாநகர இளையதளபதி விஜய் தலைமை செயலகம் சார்பாக தலைவர் S. பாபு,
காளிச்சமியின் உடன் பிறந்தவர்களுக்காக பள்ளிசீருடையும் குடும்ப நிதி வளர்ச்சிக்காக தையல் எந்திரமும் இன்று 30/08/11 வழங்கியது,
மேலும் சமூக ஆர்வலர் மகேந்திரன் மற்றும் லக்கி நிறுவன நிர்வாகி அருள்ராஜ் 5000 ஐயாயிரம் ரூபாய் வழங்கி காளிசாமியின் வறுமையின் கண்ணீர் துடைக்கப்பட்டுள்ளது,


இதுபோன்று
மக்கள் பணியில் தினமணி மற்றும் இந்தியன்  எக்ஸ்பிரஸ் செயலாற்றுவதால் உங்கள் பத்திரிகை மீது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது ,
மேலும் படித்த பத்திரிக்கைதுரையில் ஆர்வம் உள்ள  இளைஞர்கள்
இதுபோன்ற பத்திரிகையில் பணியாற்ற ஆர்வம்கொல்கிரார்கள்...
தினமணி மற்றும் இந்தியன்  எக்ஸ்பிரஸ் இன்னும் மேலும் மக்கள் பணியில் செயலாற்ற மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment