Monday, July 11, 2011

பெண்மைக்கு பெருமைசேர்த்த ஒரு பெண்

R. சுதா, வயது 32 
கணவர் சௌந்தராஜன்
இரண்டு மகள்கள்
ஜெயம் தொலைக்காச்சியில் செய்தி வாசிப்பாளர்...
தெள்ள தெளிவாக செய்தி வாசிப்பதில் சுதா வல்லமையானவர் அவரிடம் பேசும் போது அவர்...
"நான் ஐந்து வருடம் குழந்தை தொழில் ஒழிப்பு சார்பாக குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடித்து அக்குழந்தைகளுக்கு கல்வி பயிற்று வந்தேன்...
அதில் அந்த குழந்தைகளின் குடும்பத்தில் இருக்கும் ஏழ்மையை கண்டு மனம் வருந்திய நாட்கள் அதிகம் ....
அதனை தொடர்ந்து
ஏழை எளியோருக்கு ஏதேனும் என்னால் முயன்றது ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்டோ ஓட்டிவரும் என் கணவர் சௌந்தராஜன்   இருவரும் முதியோர் காப்பகம் ஒன்றை உருவாக்கி அதில் ஆதரவற்ற வயதான முதியோர்களை வைத்து பராமரித்து வருகிறோம்...
ஒருநாள்  45 வயது மதிக்கத்தக்க பிரேமா என்ற , பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் கண்ணீருடன் நடந்து கொண்டு இருந்தார் , அவரிடம்  விவரம் கேட்க்கும் போது தற்கொலைக்கு முயற்ச்சி செய்வதாக தெரிந்தது,
உடனே அவரை அழைத்து வந்து  இல்லத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுத்து அவருடைய குடும்பத்தாருடன் தொடர்புகொண்டு அவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்து ஒரு சிலவாரங்களில் பிரேமாவை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு அனுப்பிவைத்தேன்" என்று சொல்லும் போது பெண்மைக்கு  பெருமைசேர்த்த ஒரு பெண்ணை சந்தித்த நிம்மதி கிடைத்தது நமக்கும்...

 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment